தொழில் முனைவோர் கவனத்திற்கு
எந்த வகையிலும் கடன் வாங்கி தொழில் தொடங்க முன் வராதீர்கள். காரணம், முதலீட்டு என்பது பணத்தை மட்டுமே சார்ந்து இல்லை. மக்களின் சரியான தேவைகளை அறிந்து அதற்கேற்ப தீர்வுகளை உருவாக்கி பல முறை பரிசீலனை செய்து அதற்கான முதலீட்டை கணக்கெடுக்க வேண்டும். பின்பு சரியான கூட்டாளிகளை தேடி ஒன்றினைந்து செயல்பட வேண்டும். அதன் பிறகு தான் பணத்தை பற்றி சிந்திக்க வேண்டும். கடன் வாங்கி தொழில் தொடங்க நினைப்பவர்கள் பெரும்பாலும் தோல்வி அடைவதற்கு காரணம் போட்டியாளர்களை பற்றிய புரிதல் இல்லாமல் தான். சற்று சிந்திப்பது நல்லது.